Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

அதிக மன அழுத்தம் என்றால் .......


இன்றைய இயந்திர வாழ்வில் நிம்மதி இல்லை, சந்தோசம் இல்லை, தூக்கம் இல்லை, இப்படி நீண்டுகொண்டே போகிறது. ஒரு மனிதனுக்கு என்னதான் அதிக வேலை இருந்தாலும் நிம்மதியான தூக்கம் முக்கியம். உடம்புக்கு ஓய்வு தேவை. ஓய்வில்லாமல் உழைத்தாலோ, அல்லது நித்திரை வராமல் தவித்தாலோ உங்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வந்து விட ஆரம்பித்து விடும் .

மன அழுத்தத்தால் பலரும் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள். இதில் ஆண்களும் சரி, பெண்களும் சரி மன அழுத்தத்தால் இருவரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நிம்மதியான உறக்கத்துக்கு மன அழுத்தத்தை குறைத்தல் நல்லது.

நாம் மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். கொஞ்ச நேரம் சிரமம் பாராமல் உடல் பயிற்சி செய்யுங்கள். உடம்பும்
தென்பாகும். களைப்பு நீங்கும். அப்போது உடம்பு அசதியாகும். பின்பு போய் உறங்க செல்லுங்கள். நித்திரை வரும்.


ஒரு சிந்தனை குறிப்புகள், வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த புத்தகங்களை எடுத்து வாசியுங்கள். அதன் பின்பு நித்திரைக்கு செல்லுங்கள். மனதை அமைதிப்படுத்துங்கள். அதிகமாக யோசிக்காதீர்கள்.

மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தியானம் செய்யுங்கள், யோக பயிற்சி செய்யுங்கள். நித்திரைக்கு செல்லுங்கள். மனம் அமைதியாக இருக்கும் போது எமக்கு தூக்கம் உடனே வந்துவிடும்.




நித்திரைக்கு செல்லும் முன் ஒருகப் பால் அருந்தி விட்டு நித்திரைக்கு செல்லுங்கள். சத்தான உணவுகளை உண்ணுங்கள். இரவில் தினம் ஒரு அப்பிள் சாப்பிடுங்கள். இரவில் அளவுக்கு அதிகமான உணவுகளை உண்ணாமல் சமிபாடு அடையக் கூடிய இலேசான உணவுகளை உண்ணுங்கள்.

உங்களுக்கு பிடித்த மெலடியான இசையுடன் கூடிய பாடல்களை கேட்டுக் கொண்டு நித்திரை செய்யுங்கள். தூக்கம் உங்கள் கண்களை வருடும். மனதும் தெம்பாக இருக்கும். இவை எல்லாம் நாம் மன அழுத்தத்தை குறைக்கும் வழி முறைகள்.



மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் நம்மிடமே உண்டு . இதுக்கு எல்லாம் வைத்தியரை நாடி மருந்து குடித்து தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில வழிமுறைகளை நாம் பின்பற்றி பார்க்கலாம். அது சரிவரவில்லை என்றால் தகுந்த வைத்தியரை நாடலாம் .

எல்லோரும் நிம்மதியுடனும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே எனது கருத்தும்.

http://www.tamilthottam.in/t19940-topic

3 comments:

  1. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் செய்வது பலன் தரும். அதுமன அழுத்தத்தை குறைக்கும்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்.நன்றி

    ReplyDelete
  3. நன்றி லக்‌ஷ்மி மற்றும் நிலா அக்கா

    ReplyDelete

Recent Post