Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

பாட்டி வைத்தியம் - கீரையும் அதன் மருத்துவக்குணங்களும்

ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரை விலை மலிவான சாதாரணப்பொருட்களிலும் நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின் பலன்கள் பின்வருமாறு:

அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடிய கீரை வகைகளில் இது முதன்மையானது. எல்லா நோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்வைச் சிறப்பாக வைத்திருபதற்கு இந்தக்கீரை பயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமான மகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்
வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.

மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண், வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்டசஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள். மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்கு அற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.

பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில் வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்கீரையைக்கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள், மற்றும் விட்டமின் சி முதலியன் அபரிதமாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும்
கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம் ஒருமுறை இக்கீரையை உண்டுவர மூட்டுவலி,இடுப்புவலி போன்றவை நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.

முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும் தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்கு பசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின் போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.

அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்டநரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில் உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர் உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும் உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மையடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

புளியாரைக்கீரை: காயகல்பத்திற்கு இணையானது என வள்ளலாரால் பேசப்பட்டது. கபம், பித்தவாயுவை கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூலநோய்க்கும் நாட்பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.

4 comments:

  1. எங்க பக்கம் முள்ளங்கியும் கீரையுடனேதான் கிடைக்கும்
    அதன் சுவை சிறிது துவர்ப்பா இருந்தாக்கூட வெங்காயம் தக்காளி சேர்த்து செய்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் உடம்புக்கும் மிகவும் நல்லது.

    ReplyDelete
  2. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்


    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html

    ReplyDelete
  3. மிக்க நன்றி raji

    ReplyDelete
  4. நன்றி லக்‌ஷ்மி

    ReplyDelete

Recent Post