Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

குடும்ப கட்டுப்பாட்டின் முக்கயத்துவம்!!!

எதிர்பாராமல் கர்ப்பமடைதல்

திட்டமிடப்படாத கர்ப்பம் (Unplanned pregnancy)

திட்டமிடப்படாமல் ஏற்படும் கர்ப்பங்கள் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஆகும். அனேகமான சோடிகள் திருமணத்திற்கு பின் குழந்தைகள் பெற ஆர்வத்துடன் இருப்பர். அவர்களின் தேவை தனிப்பட்டது. எனவே சரியான திட்டமிடல் அவசியம்.

கர்ப்பம் ஒன்றை திட்டமிடும்போது தேவையானவை:
• உடல் சக்தி
• உள சக்தி
• குழந்தைக்கு ஒதுக்கப்பட கூடிய நேரம்
• எதிர்கால திட்டங்கள்
• பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறிவு
திட்டமிடப்படாத கர்ப்பம் கருசிதைவில் முடிவடையும்.
நிலமை:
தற்போது திட்டமிடப்படாத பிரசவங்களை கணக்கிடுவது கடினமாகும். ஆராய்சிகள் 33% எனக்காட்டுகிறது. இதில் 23%பிழையான நேரம், 10% திட்டமிடப்படாதவை.

திட்டமிடப்படாத பிரசவங்களுக்கான காரணங்கள்:

1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறியாமை.
திருமணத்திற்கு தயாராகும்போது பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு முக்கியமானதாகும். இது பாலியல் செயற்றின் பற்றிய அறிவை தரும்.

2. குடும்ப கட்டுப்பாடு பாவிக்காமை.
நம்பகரமான குடும்ப கட்டுப்பாடு பாவித்தல் திட்டமிடாத பிரசவத்தை தவிர்க்கும்.
3. குடும்ப கட்டுப்பாடு முறையில் தோல்வி
தற்போதைய அனேகமான குடும்ப கட்டுப்பாடு முறைகள் நம்பதகுந்தவை. இவை சரியாக பாவிக்கப்படவில்லை என்றால் கருக்கட்டலாம்.
4. பாலியல் வல்லுறவு
திட்டமிடாத கர்ப்பத்திற்கு என்ன நடக்கலாம்?
1. திட்டமிடாத கர்ப்பம் தேவையான கர்ப்பமாக மாறலாம்.
துணையுடன் மற்றும் வைத்தியருடன் ஆலோசித்த பின் இது தேவையான கர்ப்பமாக மாறும்.
2. திட்டமிடாத கர்ப்பம் தேவையற்ற கர்ப்பமாக தொடரும்.
தாயின் இந்நிலமை குழந்தையையும் தாயையும் பாதிக்கும்

3. திட்டமிடாத கர்ப்பம் கருசிதைவாக முடிவடையும்.
கருசிதைவு இலங்கையில் சட்டவிரோதமானது. இது தாயின் உயிரை காப்பாற்ற மட்டுமே செய்யப்படும்.

4. சிசு கொலை
தாயினால் சிசு கொல்லப்படுதல்.
தாய் தன்னை பற்றி கவலை கொள்ளாமல் உணவு மற்றும் விட்டமின்கள் தொடர்பாக கவனம் கொள்ளாமல் இருக்கலாம்.
தாய் பிரசவத்தை மறைக்கலாம்.

5. பெற்றோர் கவனியாமை

குழந்தைகள் போசனை குறைபாடு, மன உளைச்சல், மற்றும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இது உடல், உள பாலியல் ரீதியான வல்லுறவாக காணப்படலாம்.

6. தாய்க்கு ஏற்படும் பாதிப்புக்கள்.

அடிக்கடி பிரசவமடைதல்.

உடல் ரீதியாக - போசணை குறைபாடு, குருதிச்சோகை, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு நோய் என்பன மோசமாகலாம்.

உளரீதியாக – பல பிரச்சனைகள்; இது பிரசவத்திற்கு பின்னும் தொடரும். கருசிதைவு செய்து கொண்டால் தாய் அதைபற்றி பல வருடங்கள் யோசிப்பாள். இது தாயின்/குடும்பத்தின் உடல் உள சுகாதரத்தை பாதிக்கும்.
7. தத்து கொடுத்தல்.
8. குழந்தையை விற்றல்.
9. குழந்தையை விட்டு செல்லல் – எங்காவது விட்டு஠ଠசெல்லல்,ଠகுழந்தை குளிரால் அல்லது நீரிழப்பால் இறக்கும்.
10. தற்கொலை – சமுதாயத்தாலும் குடும்பத்தினாலும்ஏற்படும் அழுத்தத்தினால்

திட்டமிடாத பிரசவத்தை தடுப்பது எப்படி?
1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு.
2. உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து குடும்பத்தை திட்டமிடவும்.
3. குடும்பகட்டுப்பாடு தொடர்பான அறிவை வழங்கவும்.
4. நம்பகரமான குடும்ப கட்டுப்பாட்டினை பாவித்தல்
5. உடனடி குடும்ப கட்டுபாட்டினை தேவையான போது பாவித்தல்.

கருச்சிதைவு என்றால் என்ன?

* சிசு தனது உயிர்தன்மையை பெறும் முன் அதை வெளியேற்றல். வளர்ச்சியடைந்த நாடுகளில் இது 20 கிழமையாகும்.
* இலங்கையில் இது 28 கிழமைகள் ஆகும்.
* இது இயற்கையாகவோ செயற்கையாகவோ நடக்கலாம்.
* இலங்கையில் கருச்சிதைவு சட்டவிரோதம் என்பதால் அனேக செயற்கை கருச்சிதைவுகள் சுகாதாரமற்ற நிலையில் அனுபவம் இல்லாதோரினால் செய்யப்படுகிறது.

இலங்கையின் நிலை:
ஒரு நாளைக்கு 550-750 கருச்சிதைவுகள்.
வருடத்திற்கு 125000-175000
பத்திரிகைகள் சுட்டிகாட்டுவது: ஒவ்வொரு வருடமும் 340,424 குழந்தைகள் உயிருடன் பிறக்கின்றன. 240,170 கருச்சிதைவுகள்.
அதாவது ஒவ்வொரு 3 குழந்தைக்கும் 2 குழந்தை கருசிதைவடைகிறது.

இலங்கையில் கருசிதைவு தொடர்பான சட்டங்கள்.

கருச்சிதைவு தாயின் உயிருக்கு ஆபத்து எனின் மட்டுமே செய்யப்படும்.
இரு விசேட வைத்தியர்கள் தாயின் உயிருக்கு ஆபத்து என ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.
இது சட்ட விரோதமானது மற்றும் குற்றமாகும்.

தாய்க்கும் குழந்தைகளுக்கும் ஏற்பாடும் பக்க விளைவுகள்.

இது உடல் உள மற்றும் சமூக ரீதியான விளைவுகள் ஆகும்.
உடல் ரீதியான:
உடனடி பக்கவிளைவுகள்
• இரத்த கசிவும் இறப்பும்.
• தொற்று நோய்.
• கருப்பை மற்றும் கருப்பை கழுத்துக்கு சேதம்.
• குறைவான வெளியேற்றம்
• சிறுநீர் பைக்கும் யோனிக்குமிடையிலான தொடர்பு
• உள்ளக உறுப்புகளுக்கு சேதம்.
பின்பக்க விளைவுகள்
• கருகட்டும் ஆற்றல் குறைவு
• தொடர் அடி வயிற்று வலி
• உள்ளக உறுப்புகளில் தொற்று நோய்கள்.
• அடுத்தடுத்த பிரசவங்களில் முன் கூட்டி பிள்ளை பிறத்தல் தன்னிச்சையான கருச்சிதைவு என்பவற்றிற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
• தாய்/குடும்பம் மீதான உளரீதியான தாக்கம்.

கருசிதைவுக்கான காரணம்.
பொதுவான காரணிகள்.
• குழந்தை ஒன்றை பெற்றுகொள்ள வயது அதிகம்.
• மற்றைய குழந்தைகள் பெரியவர்கள்
• இளைய குழந்தை மிக சிறியது
• குடும்பம் பூர்த்தியாக்கப்பட்டது.
மற்றைய காரணிகள்
• குடும்ப கட்டுப்பாடு முறை தவறுதல்
• பண நெருக்கடி
• தாயின் சுகாதார பிரச்சனைகள்.
• திட்டமிடாத பிரசவம்
• மருந்துகள் உட்கொள்ளல்
• முன் சத்திர சிகிச்சை
• திருமணம் செய்யவில்லை

குடும்ப கட்டுப்பாடு பாவிக்காத காரணங்கள்
• பக்கவிளைவுகள் தொடர்பான பயம்
• அறியாமை
• அடிக்கடி உடலுறவு கொள்ளாமை
• அதிக வயதினால் கருத்தரிக்காது என்ற நம்பிக்கை
• துணை விருப்பம் இல்லை
• பாலூட்டல்ଠ
• புதிதாக திருமணம் செய்தவர்கள்
• மருத்துவ காரணங்கள்

கருச்சிதைவுக்கு பின்....

* ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் உள ரீதியான பக்கபலம் கொடுக்கப்பட வேண்டும். கருச்சிதைவின் பக்கவிளைவாக 8ல் ஒரு குழந்தை இறக்கின்றது.

இதன் கூறுகள்......
1. உடனடி மருத்துவ சிகிச்சை

* வலியை போக்குதல்

2. குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை/சேவைகள்

* இது அடுத்தடுத்த கருச்சிதைவுகளை தவிர்க்கும்.

3.மற்றைய இன்பெருக்க சேவைகளுக்கு
இலிங்க நோய்களுக்கு சிகிச்சை
கருப்பை கழுத்து புற்றுநோய் பரிசோதனை
கருக்கட்டல் ஆற்றல் குறைவு சேவைகள்
பிரசவத்திற்கு முன்

4. ஆலோசனை
-உளரீதியான பக்கபலம்
-கருச்சிதைவு
-குடும்பத்தை திட்டமிடல்
-மீண்டும் பிள்ளைபேற்றை அடைதல்
-வைத்தியரை நாட வேண்டியது எப்போது?
-அடி வயிறுவலி
-ரத்தம் வெளியேறுதல்
-காய்ச்சல் உடல் உளைச்சல்
-யோனி வெளியேற்றம்
-வயிறு வீக்கம்
-வாந்தி எடுத்தல்

திட்டமிடாத பிரசவத்தை/கருச்சிதைவை தடுப்பது எப்படி?

* சோடி செய்ய வேண்டியவை
* பாலியல் இனப்பெருக்க அறிவை பெறுதல்
* குடும்பத்தை திட்டமிடல்
* குடும்ப கட்டுப்பாடு முறைகள் பற்றி அறிதல்
* தொடர்ச்சியாக சரியாக குடும்ப கட்டுப்பாடு பாவித்தல்
* உடனடி குடும்ப கட்டுப்பாடு தொடர்பான அறிவு

சுகாதார சேவை வழங்குனர் செய்ய வேண்டியவை

* பாலியல் இனப்பெருக்க அறிவு வழங்குதல்
* குடும்ப கட்டுப்பாடு நிகழ்ச்சிகள்
* கர்ப்பிணி தாய்மார்களினதும் குழந்தைகளினதும் சமுதாய பாதுகாப்பினை பேணுதல்
* குடும்ப கட்டுப்பாடு பாவனையை அதிகரிக்க வழி வகுத்தல்
* உடனடி குடும்ப கட்டுப்பாடு பற்றி கற்று கொடுத்தல்
* குடும்பகட்டுப்பாடு தொடர்பான ஆண்களின் அணுகுமுறையை கண்காணித்தல்.

3 comments:

  1. மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...

    ReplyDelete
  2. அக்கா மனம் நிறைந்த நன்றிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு
    நன்றி

    ReplyDelete

Recent Post